TAMIL KAVITHAIKAL

 

தாயின் துடிப்பு

உனக்காய் துடித்த ஓர் இதயம்
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட துடிக்கிறது முதியோர் இல்லத்தில்!
என் மகன் எப்படி இருக்கிறானோ என நினைத்து?


முரட்டுக் காதல்

என்னவளே என் கண்ணிமையை
வெட்டிவிட்டேன் உன் வருகையை
கண் சிமிட்டாமல் பார்ப்பதற்கு அது
தடையாய் இருப்பதால்!


கவி ஓவியம்
 
உள்ளமதில் வெள்ளமென
எழுந்திட்ட எண்ணங்களை
கருத்தாய்ந்து பகுத்தாய்ந்து
பாரெல்லாம் வழங்கிடவே
அன்னைத்தமிழ் அருள்வேண்டி
தமிழ்புலவன் நடைநின்று
தெளிமிகு சிறப்புடனே
வடித்திடவே முனைந்திட்டேன்

சொல்லொன்று தீட்டிடவே
ஓராயிரம் நொடிப்பொழுது
செலவழித்து இரவெல்லாம்
விழிகளை சேகரித்து
நாளெல்லாம் மூச்சுவொன்றே
உணவாக சுவாசித்து
தீட்டிட்ட தீந்தமிழ் திரவியம்
நான் வரைந்திட்ட கவி ஓவியம்

அன்பு = 100

அ உயிரெழுத்தின்
முதல் எழுத்தே - நீ
எண்ணிக்கையில் 1
ன் மெய்யெழுத்தின்
இறுதி எழுத்தே - நீ
எண்ணிக்கையில் 18
பு என்ற உயிர்மைஎழுத்தே
உன் எண் வரிசை 81 - கண்டீரா
அன்பு என்ற தமிழ் சொல்லின்
கூட்டுத்தொகை 100 என்று
அன்பென்றால் நூறு
நூறென்றால் முழுமை
முழுமை என்றால் நிறைவு
அன்பு வழிச் சென்றால்
முழுநிறைவுன்ற மகிழ்ச்சியும்
அதன் வழி வரும் அமைதியும்
நூற்றுக்கு நூறு - நம்
வாழ்வில் சாத்தியமே - இதுவே
சான்றோரின் சரித்திரமே

காதல் ஏக்கம்

உன் வியர்வை நாற்றம் கூட
எனக்கு சுகம் தானடி........!!
உன்னை கட்டி பிடிக்கையில்.......!!

என் தியாகம்....

வானளவு சிந்தித்து ஊமையாகி போன உணர்வுகள்...
வேற்றினக் காரன் என்று தகுதியிழந்ததால்
காதலை வெறுத்த என்னவள் ஒருபுறம்,
இனத்தில் சேர் என்று அன்பாய் அரவணைக்கும்
என்னை ஈன்றவள் ஒருபுறம் என்று, 
காரணங்காட்டி பிரிந்துபோன என் காதலில்
"தியாகம்" என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறது என் இயலாமை

காதல் அல்ல

எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் வாரம்...

!!*!! கண்கள் மோதிய காயம் !!*!! 

மறைந்து போகும் மேகமாய் வந்தாய்…!!
கண்கள் மோதிய காயம் தந்து சென்றாய்…!!
எவ் வேளையும் உன்னை நினைப்பதே,
என் வேலை என்றாக்கினாய்….!!

அணையிட்டு கட்டிய காதல் உணர்வை,
உன் காதல் வெள்ளத்தில் மூழ்கடித்து,,,,
உடைத்து சென்றாய் முழுவதுமாய் என்னை….!!

உன் பெரும் நினைவலைகள் அனைத்தும்,
சிறு கண்ணீர் துளிக்குள்,
சுனாமியாய் மாறுவதேன்….!!

நட்புக்குள் காதலை மறைக்க முயன்று,
செயற்கையாய் நிகழ்கிறதோர்,
இயற்கை மரணம் தினம் தினம்….!!

சொல்லுக்குள் அடங்காத காதலை உரைக்க மொழியேது…!!
மறுக்கப்பட்ட என் காதலை எழுத,,
கண்ணீரை தவிர வார்தையேது…!!!

உன்னை பிரிகயிலே.. 

எனது நாட்களை
மகிழ்ச்சியுடனே
தாங்கிச்சென்ற
உனது நிமிடங்கள்
தூக்கிலிடப்பட்ட
உயிரற்ற நிமிடங்களாய்..
உன்னை பிரிகயிலே!

பூக்களாக நீ ..! 

உறங்கா வேளைகளில்,
நினைவுகளாக நீ !
உறங்கும் வேளைகளில்,
கனவாக நீ !
எழுதும் வேளையில்
கவிதையாக நீ ..!
பேசும் வேளையில்
குழந்தையாக நீ ..!
சிரிக்கும் வேளையில்
பூக்களாக நீ ..!
இருக்க வேண்டும் கண்ணே ..!

இங்கேயே வாழ்ந்திடுவோம் ...! 

எங்கோயோ பிறந்தோம்!
எங்கோயோ வளர்ந்தோம்!
எங்கோயோ படித்தோம் ..!
அனைத்தும் ஓரிடமானது ..
உன் பார்வையால் ....
இங்கேயே காதலாணோம் ..!
இங்கேயே உறவானோம் ...!
இங்கேயே வாழ்ந்திடுவோம் ...!


""முடிவேயில்லாத......"" 

கண்களில் வழிகின்றன காதல்...
காதலில் பிறக்கின்றது கவிதை...
கவிதையில் அழுகின்றது உள்ளம்...
உள்ளத்தில் உறைந்துவிட்டது நினைவு...
நினைவுகளில் நிறைகின்றது இனிமை....
இனிமைகளில் இணைகின்றது இளமை..
இளமையில் எழுகின்றது ஏக்கம்....
ஏக்கங்களில் மிஞ்சுவது கண்ணீர்...
கண்ணீரில் மறைகின்றது காட்சி....
காட்சியில் சிதறுகின்றது கற்பனை...
கற்பனையில் கலங்குகின்றது கண்கள்...
கண்களில் வழிகின்றன காதல்.....

கவிதை கேட்க்கிறாய் 

என் கையில் பேனா எடுத்தால்
உன் கற்பனை முகம்வந்து என்னிடம்
கவிதை கேக்குதடி.

அழகுக் கவிதை..! 

உன்னை நினைத்து
எழுதிப் பார்த்தேன்...
வார்த்தை வரவில்லை
இன்னும் முயன்று பார்த்தேன்...

முடிவாய் ஒரு சொல்
அது என் தேவதை !

ஆம்.....
அழகுக் கவிதை
அது உன் பெயர்தானடி!

நிலவானவள் 

வண்ண ஒளி நிலவொன்று
வழி தொடரும் நிழல்தனில்
சுகமுண்டு !
முழு நிலவாய் எதிர்வரும் நாளில்
முன்ஜென்மம் காணாத
இன்பங்கள் கோடி அதிலுண்டு !

உன்னோடு நான் இருப்பேன்♥....... 

இன்று என்னை
பிரிந்தாலும்
மறந்தாலும்
என்றாவது நீ
என்னை நினைக்கும்போது
உன் கண்களில்
இருப்பேன் கண்ணீராக... நான் ♥.......

பிரிவு 

கருவறையில்
உருபெற்று
உலகை பார்க்க
உருவெடுத்ததே
பிரிவு ,,,,,

கவலை உணர்ந்து
விழி பார்த்து
வழியனுப்பும்
கண்ணுக்கே கண்ணீரும்
ஒரு பிரிவு

காலம் காலமாய்
காதலித்து
கடைசியிலே
கவலையும் சேர்த்துவிட்டு
கண்ணை
கலங்க வைப்பதும்
ஒரு பிரிவு ,,,,,,

உன் வார்த்தையால் 

இடி விழும்
உன் வார்த்தையால்
மண் அடியில்
போக எண்ணுது
என் உடல்
உயிர் மட்டும்
உலா வரும்
உன் பின்னால் உணர்வாயா??,,,,,

கல்லையேன் காதலித்தாய்...? 


உன்னை காத்திருந்த நாட்களை ....
நிமிடங்கலாக்கினால் கோடிநிமிடம்...

நீயோஒருநிமிடத்தில் பிடிக்கவில்லைஎன்றுவிட்டாய்

எஞ்சிய நிமிடங்கள் ஏளனம் செய்கின்றன ...

கல்லையேன் காதலித்தாய் என்று ...?

எதிராக ஏன் செய்தாய்...? 


வந்தாய்- காதல் தந்தாய் -சென்றாய்..
வென்றேன்- காதலை தனிமையை -தோற்றேன்
சிரித்தேன் -காதலை நினைத்து இப்போ -அழுகிறேன்
ஒருமை- காதலி நீ வராது என்றும் காதல்- பன்மை
வாழ்வேன் -உன்னோடு இல்லையேல் -சாவேன் ..

காதலியின் பிரிவு...........................!! 


நான் என்ன தவறு செய்தேன்
என் அன்பே.............!!

ஏன் இந்த பாராமுகம்,

நீ என் பார்வையின்
தீர்க்கத்தை தவிர்க்கும் போது எல்லாம்
நான் ஏதோ தவறு செய்து
விட்டானோ?
என்று எனக்குள்
உள்ள இதயம் வெடிக்கிறது.

நீதான் பார்க்க மாட்டாயா?
என்று நானும்,

நான்தான் பார்க்க மாட்டேனா?
என்று நீயும்,

தவித்த தவிப்பு
நமக்குள் தெரிந்திருந்தாலும்
தெரியாமல் காட்டிக்கொண்டோம்.

நீ பார்க்கக் கூடாதா?
என்று,,,,,,,
நினைக்கும் போது,

உன் விழிகள் என் உருவத்தையும்,

நான் பார்க்கக் கூடாதா?
என்று,,,,,,,
நினைக்கும் போது ,

என் விழிகள்
உன் உருவத்தையும்
பார்க்காமல் இருந்தில்லை.

விழிகள் நாணப்படுகின்றன என் அன்பே!!

என்னை மறந்து செல் என் காதலை மறுத்து செல்லாதே


உயிரே...
என்னுடன் எவளோ
ஒருவளாக பேசினாய்...

முகமே தெரியாமல்
காதல் கடிதங்கள்...

பல கொடுத்தாய்
என் முகவரிக்கு...

என் முகம்
அறியாத நீ...

என்னை நேசிக்கிறேன்
என்றாய்...

நேரில் என்னை
காணவேண்டும் என்றாய்...

நாம் சந்தித்த
வேலை...

மீண்டும் என்னிடம்
உதிர்த்தாய்...

நீயும் என்னை
நேசிப்பாயா என்று...

பதில் தாராதவன்
முகம் பார்த்து அழுகிறாய்...

என்னை மறந்து செல்
ன் காதலை மறந்து
செல்லாதே என்றாய்...

உன்னை தேடி நான்
வரும் வேலை...

நீ மருததோடுமட்டுமல்லாமல்
என்னை மறந்தும் சென்றுவிட்டாய்.....

அம்மாவின் அன்பு 


வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் நாம் ரசிப்பது ,
நிலைவைத்தான் அது போல் !
பூமியில் எத்தனை பெண்கள் இருந்தாலும்
நம்மை நேசிப்பது பெற்ற தாய் மட்டும்தான் !

 

காதலலை!!! 


நானெழுதிய கவிதையது
நீயெப்படி பாடுகிறாய்!
தேனொழுகும் வரிகளை
தேடித்தேடி யெழுதினேனே!
கானமீட்டிப் பாடுகிறாயே!
கிடைத்ததும் எப்படியோ!

சிந்தையது ஒன்றிணைந்த
விந்தையிது என்பேனா!!
கொண்டணையத் தேடுகின்ற
காதலலை யென்பேனா!!
இந்தவினை யதுசெய்யும்
இறையூழென்பேனா!!

அல்லியுடன் பாடுகிறேன்
நிலவை நீ தேடுகிறாய்!!.
தாமரையை போற்றுகிறேன்.
கதிரவனை வாழ்த்துகிறாய்!!.
இருவருக்குள் இயற்கையாக
எழுந்ததோ காதல் வாழ்க!!

 

அழகுக் கவிதை..! 


உன்னை நினைத்து
எழுதிப் பார்த்தேன்...
வார்த்தை வரவில்லை
இன்னும் முயன்று பார்த்தேன்...

முடிவாய் ஒரு சொல்
அது என் தேவதை !

ஆம்.....
அழகுக் கவிதை
அது உன் பெயர்தானடி!

 

நட்பு

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை....

நிஜம்

அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
இதயங்களின்
நட்பில்
இருக்கிறது

மொழி

தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்

காதல்
உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!

கண்டதும் காதல்
முதல் பார்வையிலேயே,
என் பருவம் பதறியதே,
கன்னி நான் கர்ப்பம் அடைந்தேன்,
நம் காதலை பிரசவித்தேன்!

காதல் அல்ல
எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் வாரம்...

  என் வீட்டு கண்ணாடி
என் வீட்டு கண்ணாடியில்,
என் உருவம் தேட..
உன் முகம் காண்கிறேன்,
இது மந்திர கண்ணாடியா?
இல்லை,
ஒரு முறை உன்னை கண்டதனாலோ,
இவனும் என் போல,
உலகம் மறந்து விட்டான்,
கடமை தவறி விட்டான்..
நாளை,
ஜோடியாக நம்மை சுமக்கும் நாளில்,
கணம் தாங்காமல் உடைந்து போவானோ?

காதல் விளையாட்டு

இருவருக்குமே வெற்றி என்பதெனில்
எனக்கும் சந்தோஷம்தான்.

நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
நான் தோற்றுபோககூட
சித்தமாயிருக்கிறேன்.

ஆனால்,
இருவருமே தோற்றுபோவோம்
என தெரிந்த பின்னும்
ஏனடி இந்த காதல் விளையாட்டு.



ஒருதலைக் காதல்


மகேஷ்வரன்

காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை

ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்

பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்

நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை

எழுந்திரு..!

விடியும் என்ற
எண்ணத்தில் உறங்க
செல்லும் நீ,
முடியும் என்ற
எண்ணத்தோடு
எழுந்திரு..!
அனைத்தையும்
சாதிக்கலாம்..
 
காதல் கவிதை (Kadhal Kavithai)
 என் நிம்மதி செத்துவிட்டது என் சந்தோஷம் சாம்பல் ஆனது! இது இயற்கை மரணம் அல்ல! இது தற்கொலையும் அல்ல! இது கொலை கொடூர படுகொலை என் நிம்மதி சந்தோஷம் கொன்றவள் நீ! அதற்கு சாட்சி என் மனதில் என்றும் உன் நினைவு...! 
  உன் மீது காதலா....? 
என் வீட்டு வாசல் படி கூட
உன்னை தேடுகிறது....
உன் காலணிகளின்
அழகை பார்ப்பதற்காக....
அதற்கும்
உன் மீது காதலா... 

 காதல் வெல்லும்  
காதல் என்றால் எளிதல்ல
கந்தனைக் கேளுங்கள்.
காதலைக் காப்பாற்ற-அவன்
சாதித்ததும் எளிதானதா?

வேடனாய் மானைத்தேடி

காடெங்கும் அலைந்துபின்
கண்டாலும் வள்ளியை-அவன்
கஷ்டங்கள் எளிதானதா?


கொள்ளிமலை வனத்திலே

வள்ளியை நெருங்கிட
தள்ளாடுங் கிழவனாய்-அவன்
தரித்தவேடம் எளிதானதா?

ஏலேலங் காட்டுக்குள்ளே

எத்தனைநாள் அல்லலகள்!.
நம்பிராசன் நாட்டுக்குள்ளே-அவன்
நுழைந்ததும் எளிதானதா?

தும்பிக்கையான் துணையாலே

தோற்கவில்லை அக்ககாதல்.
நம்பிக்கை இருந்தாலும்-அவன்
நையான்டி எளிதானதா?

ஏளனங்கள் எத்தனை!

இழிவுகள்தான் எத்தனை!
இறைமகனே ஆனாலும்-அவன்
வென்ற காதல் எளிதானதா?

உறுதியான காதலுடன்

இறுதிவரை நிலைத்திட்டால்
இறைவனே துணைசெய்வான்-அவன்
வென்றகாதல் வாழவைப்பான்..

  உன் ஒரு பார்வை... 
அமாவாசையும் வேண்டாம்..
பௌர்ணமியும் வேண்டாம்.

உன் ஒரு பார்வை போதும்

என் வாழ்வில் ஒளி ஏற்றவும்
இருள் கொண்டு வரவும்....

எத்தனை முறை நினைத்தேன்

என்பது முக்கியம் இல்லை
நீ நான் நினைத்ததை
எத்தனை முறை
உன்னுள் வாங்கிக் கொண்டாய்
என்பதுதான் முக்கியம்! 

உன்னாலே 
நான் கொடுத்த பூக்களை
மணப்பது போல் உன் ஓரக்
கண்களால் நீ என்னை பார்க்கும்.
அந்த பார்வை ஓராயிரம் அர்த்தங்கள்
சொல்கையில் அதை அறியாதவன்
போல் நான் உன்னை பார்க்க
அதை நீயும் மறுப்பதேனடி ........! 

உந்தன் நினைவு 
எப்போதும் பேசி கொண்டிருக்கும் உதடுகள்
ஊமையாகின்றன ,
உன் குரல் கேட்கும்போது மட்டும் ....

இடைவிடாமல் இமைத்து கொண்டிருக்கும்

இமைகள் இமைக்க மறகின்றன,
உன் முகம் கண்ணும் போது மட்டும் .........

நிஜங்களில் வாழ்ந்தாலும் கனவுகளையே நேசிக்கிறேன்

உன் நினைவுகள் என்னை தீண்டி
செல்லும் போது மட்டும் .......

 
 
கடலலையின் சிரிப்பு 
நாமிருவரும் கால் நனைத்த
ஈரம்கூட காயவில்லை
நான் வாங்கிய
சுண்டல்கூட தீரவில்லை
உனக்காக வாங்கிய
பூக்கூட உன்தலை ஏறவில்லை
உனக்குத் தெரிந்தவர் யாரோ
வருவதைக் கண்டு
நீ எழுந்து ஓடுவதை
நான் பார்துக்கொண்டிருக்கிறேன்
கடல் அலைகள் எனைப்
பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறது...!
 
 
 

3 comments:

  1. MEL IMAI NEE YENDRUM KEEL IMAI NAAN YENDRUM SONNEN
    ATTHARKKA PIRINTHEVA IRUBBATHU
    SIMITTIVIDU KANNI VALLIKKIRATHU



































































































































































































































































    ReplyDelete
  2. இந்த channal ரொம்ப பயன் உள்ளதாக உள்ளது இருத்த போதில்லும் காதல் லை பற்றி அனைத்தையும் விரிவாக எழுதி உள்ள்ளர்கள் சூப்பர் உள்ளது
    இந்த links படித்து பாருங்கள் ?

    https://lovegeniusguru.blogspot.com/2018/09/chatting.html

    ReplyDelete
  3. Very nice blog about Tamil inspirational quotes. Superb inspirational Quotes
    Read more Tamil Quotes

    Very Useful information. Thanks for sharing this article. Sharing for learn
    Read More Article

    ReplyDelete